சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கு மத்திய அமைச்சர் பாராட்டு

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்தார்.

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் நிதின் கட்காரி, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் விபத்துகளை குறைக்க முடியும் என்று கூறினார்.

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் குறைவாக இருப்பதாக தெரிவித்தார். இதற்காக தகுந்த நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version