கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நாகர்கோவிலிலுள்ள பருத்திவிளை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மேரிஜெனிபர் என்ற பெண் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Discussion about this post