திருத்தணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருத்தணிக்கு கபாலீஸ்வரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அவர் பைபாஸ் சாலையில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த வெங்கடேசன் என்பவரது இருசக்கர வாகனதோடு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த இருவரும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post