சென்னையில் தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

சென்னையில் இரவு நேரங்களில் வழிபறியில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவேற்காடு பகுதியில் இரவு நேரங்களில் வழிபறி மற்றும் செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து திருவேற்காடு காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்த இருவர் நேற்றிரவு நடந்த வாகன சோதனையின் போது சிக்கினர். முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் வாணியம்பாடியைச் சேர்ந்த சதீஷ் குமார் மற்றும் சென்னை பெரியமேட்டை சேர்ந்த குமார் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து 7 பவுன் நகை , 4 செல்போன் மற்றும் ஒரு இருச்சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version