அமமுக நிகழ்ச்சியில் காலியான நாற்காலிகளுக்கு மத்தியில் பேசிய டி.டி.வி. தினகரன்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காலியான நாற்காலிகளுக்கு மத்தியில் டி.டி.வி. தினகரன் உரையாற்றினார்.

நெய்வேலி பேருந்து நிலையம் அருகில் அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்காக அண்ணா திடலில் பகுதி பகுதியாகப் பிரித்து ஒரு பகுதிக்கு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. இந்தக் கூட்டத்தில் கட்சியினர் குறைந்த எண்ணிக்கையிலேயே கலந்து கொண்டதால் ஏராளமான நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. டிடிவி தினகரன் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போதே, கூட்டத்திலிருந்து ஏராளமானோர் கலைந்து சென்றனர். இதனால், உள்ளூர் நிர்வாகிகள் என்ன செய்வது என்று புரியாமல் நின்றனர்.

Exit mobile version