இடைத்தேர்தலில் தினகரனின் 20 ரூபாய் டோக்கன் திட்டம் எடுபடாது – அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

மேலும், நடைபெற உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் 20 ரூபாய் டோக்கன் திட்டம் எடுபடாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Exit mobile version