திரிபுரா காங். தலைவர் காவல் நிலையத்துக்குள் புகுந்து கைதி மீது தாக்குதல்

திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர், காவல் நிலையத்துக்குள் புகுந்து, கைதி ஒருவரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவரான பிராத்யாட் தேவ், கிழக்கு திரிபுரா மக்களவை தொகுதியில் போட்டியிடும் நிலையில், தேர்தல் பரப்புரையின்போது, ப்ரக்யாவின் கார் மீது ஒருவர் கல் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை பார்க்க வந்திருந்த பிராத்யாட், காவல் நிலையத்தில் வைத்து அந்த நபரின் கன்னத்தில் அறைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்தனர். காவலர் ஒருவரும் கை கூப்பியபடி அவரை அமைதிப்படுத்தினர்.

இந்த காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Exit mobile version