வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் மாளிகையில் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் இணை தேர்தல் அதிகாரி தீபக், மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி கோவிந்தராவ், மாவட்ட தேர்தல் முன்னோடி அலுவலர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாகவும், மின்னணு முறையில் மாற்றப்பட்ட தபால் வாக்குகளை எப்படி எண்ணுவது உள்ளிட்ட பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Exit mobile version