கொடைக்கானலில் சத்துணவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

கொடைக்கானலில் சத்துணவு பணியாளர்களுக்கு தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சத்துணவு பணியாளர்கள் எவ்வாறு தூய்மையாக இருக்கவேண்டும் என்றும் சமையல் செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் சமையல் செய்யும்போது ஏற்படும் தீ விபத்தில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் தீயணைப்பு துறையினர் மூலம் செய்து காட்டி விளங்கங்கள் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, சுமார் 50க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version