சத்துணவு பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

அமைச்சர் சரோஜாவின் கோரிக்கையை ஏற்று, வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக, சத்துணவு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவு பணியாளர்கள் 5 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா இன்று வெளியிட்ட அறிக்கையில், சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி வருவதை சுட்டிக்காட்டி இருந்தார்.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, ஊதிய உயர்வு மற்றும் ஆண்டுதோறும் 3 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

சமூக நலத்துறை செயலாளருடன் சத்துணவு பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக பணிக்கு திரும்பவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version