பிரசாரத்தின்போது போக்குவரத்து நெரிசல்: ஹாரன் அடித்து வைகோவை விரட்டிய பொதுமக்கள்

திண்டுக்கல்லில் பிரசாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் ஹாரன் அடித்து வைகோவை விரட்டி அடித்தனர்.

பழனியில் திமுக வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார். பழனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆயக்குடியில் சாலை நடுவே பிரச்சார வாகனத்தை நிறுத்தி வைகோ பேசினார். வைகோ பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கிக்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஹாரன்களை தொடர்ந்து அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வைகோ பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்தி விட்டு புறப்பட்டார்.

வைகோ பேசிக் கொண்டிருந்தபோது பொதுமக்கள் தொடர்ந்து ஹாரன் அடித்ததும், இதனால் வைகோ தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Exit mobile version