"வாகன நெரிசலால் திணறும் சென்னை" – போக்குவரத்து பாதிப்பு

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 11ம் தேதி முதல் சென்னையில் வசித்து வந்த பிற மாவட்ட மக்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

தற்போது விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் அவர்கள் சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக சென்னையின், முக்கியப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து எம்.எம்.டி.ஏ வரை வாகனங்கள் ஊர்ந்து செல்ல கூடிய நிலை நிலவுகிறது. எனவே முறையான போக்குவரத்து மாற்றங்கள் செய்யவும், நெரிசலை குறைக்கவும் வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Exit mobile version