5-வது ஆண்டாக நடைப்பெற்ற பாரம்பரிய நெல் திருவிழா

நாகை மாவட்டம் சீர்காழியில் 5-வது ஆண்டு நெல் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின் படி நெல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நெல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பாரம்பரிய நெல் வகைகள் மாட்டுவண்டியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. கொள்ளிட முக்கூட்டில் தொடங்கிய ஊர்வலம் ஜெயராமன் அரங்கில் நிறைவடைந்தது. நெல் திருவிழாவில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் அனைத்து இடு பொருட்களும், பாரம்பரிய நெல் விதைகள், அரிசி வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

Exit mobile version