குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

Exit mobile version