தொடர் விடுமுறையால் மூணாறுக்கு குவியும் சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறைறையை தொடர்ந்து மூணாறில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மூணாறுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. மூணாறில் வாகனங்களை நிறுத்த எந்த வசதிகளும் இல்லை என்றும், எனவே, சாலை ஓரத்தில் நிறுத்த வேண்டிய நிலை இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ மீட்டர் செல்வதற்கு குறைந்தது 45 நிமிடங்கள் ஆவதாகவும், அவசர நிலைக்கு மாற்றுப்பாதையும் இல்லை என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version