உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களைத் திரும்பபெற நாளை கடைசி நாளாகும்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாளாகும். முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 30ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Exit mobile version