நாளை கேரளா செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால்  சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.   இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில்,    துணை ராணுவ படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நாளை நேரில் பார்வையிடுகிறார். இதனிடையே, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் பினராய் விஜயன் இன்று பார்வையிட்டார். 
Exit mobile version