News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும்: தமிழக அரசு

Web Team by Web Team
March 16, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும்: தமிழக அரசு
Share on FacebookShare on Twitter

தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்க கோரி மீனவர் நல சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில், வழக்கு தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு திடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச்10ஆம் தேதி நிலவரப்படி இலங்கை சிறையில் 3 தமிழக மீனவர்கள் மட்டுமே உள்ளதாகவும், 2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு, கைது நடவடிக்கைகள் குறைந்துள்ளதாவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு 250 ரூபாய் வழங்கப்படுவதாகவும், ஆயிரத்து 750 மீனவ குடும்பங்களுக்கு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அமல்படுத்த 286 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, 750 படகுகள் கட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டனர். இந்த திட்டங்களை அமல்படுத்தியதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கும் நீதிபதிகள் பிறப்பித்தனர். இதனை அடுத்து வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: கச்சத்தீவுசென்னை உயர்நீதிமன்றம்தமிழக மீனவர்கள்
Previous Post

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுகாதாரப்பணிகள் குறித்து ஆய்வு

Next Post

பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 362 பேர் மீதான வழக்கு ரத்து

Related Posts

அமைச்சர்னா என்ன?  சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது:  மாஸ் காட்டும் நீதிமன்றம்
TopNews

அமைச்சர்னா என்ன? சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது: மாஸ் காட்டும் நீதிமன்றம்

July 27, 2021
மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி
TopNews

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

July 23, 2021
செல்போன் பேசியபடி விழுந்து இளம்பெண் பலி…  தவறுதலா? தனிநபர் வன்மமா?
TopNews

செல்போன் பேசியபடி விழுந்து இளம்பெண் பலி… தவறுதலா? தனிநபர் வன்மமா?

July 7, 2021
இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
TopNews

இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

July 5, 2021
மறக்க முடியாத நாள் – தமிழக மீனவர்களின் உரிமையான கச்சத்தீவை திமுக தாரைவார்த்த தினம் இன்று
TopNews

மறக்க முடியாத நாள் – தமிழக மீனவர்களின் உரிமையான கச்சத்தீவை திமுக தாரைவார்த்த தினம் இன்று

June 29, 2021
ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
TopNews

ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

June 9, 2021
Next Post
பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 362 பேர் மீதான வழக்கு ரத்து

பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 362 பேர் மீதான வழக்கு ரத்து

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version