ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமாக 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமாக, 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது என கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.   திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலும், பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறப்பட்ட தங்கம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், குறிப்பாக, தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து தங்கங்களும், ஆபரணங்களும் பாதுகாப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version