கவுன்சிலர்கள் மூலம், மேயரை தேர்வு செய்யும் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியீடு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயரை தேர்வு செய்யும் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கவுன்சிலர்கள் மூலம் மேயர்களை தேர்ந்தெடுக்க வழி செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், மற்றும் பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்ய இச்சட்டம் வழிவகை செய்யும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசு இந்த அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

Exit mobile version