கஞ்சா விற்பனை தொடர்பாக நண்பர்களுக்குள் மோதல்: 3 பேர் கைது

ஆவடியில் கஞ்சா விற்பனை தொடர்பாக மதுபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஆவடி அடுத்த பருத்திப்பட்டு எம்ஜிஆர் நகர் உள்ள தனியார் மதுபான பாரில் 5 பேர் நண்பர்களுடன் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் கஞ்சா விற்பனை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் 5 பேருக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜேஷ், விஷால் ஆகிய இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் ராஜேஷ், சுந்தர், சூர்யா ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பரத், நாகராஜ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Exit mobile version