தேனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது

தேனி மாவட்டம் போடி பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன், சரஸ்வதி இருவரும் கஞ்சா விற்பதாக போடி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version