கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்ற இருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒன்றரைக் கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாதவரத்தை சேர்ந்த ரம்யா வீட்டில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து ரம்யாவைக் கைது செய்ததுடன் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர்.

Exit mobile version