மதுரை அருகே தவளை கிடந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டு, மூன்று குழந்தைகள் வாந்தி, மயக்கம்!

மதுரை கோவலன் நகரை சேர்ந்தவர் அன்புச்செல்வம் குடும்பத்துடன் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கோயில் அருகே இருந்த சிற்றுண்டியில் குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்துள்ளார். குழந்தைகள் ஆசையாக ஐஸ்கிரீமை சாப்பிட்டு கொண்டிருந்த போது, தவளை ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ந்துள்ளனர். சிறிது நேரத்திலேயே குழந்தைகள் அடுத்தடுத்து உடல்நலம் குன்றிய நிலையில், உடனடியாக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். கோவில் அருகே இதுபோன்ற தரமற்ற, சுகாதார சீர்கேடான உணவுகளை விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உரிய சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version