பள்ளி மாணவர்களுக்கு தரையில் அமர்ந்து பாடம் நடத்திய திருவள்ளூர் ஆட்சியர்

திருவள்ளூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு தரையில் அமர்ந்து, மாவட்ட ஆட்சியர் பாடம் நடத்தியது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் தொட்டி, சமையல் கூடம் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், முதலாம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடினார்.

அப்போது மாணவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்த ஆட்சியர், மாணவர்களை பாடச் சொல்லி ஊக்கப்படுத்தினார். இந்த நிகழ்வு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version