திருப்பரங்குன்றத்தில் தொடர் மழையால், கடல்போல் காட்சியளிக்கும் கண்மாய்

தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்ட திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கடல்போல் காட்சியளிக்கிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள தென்கால் கண்மாய் மூலம், திருப்பரங்குன்றம், நிலையூர் விளாச்சேரி, ஆரியகுளம், பானம் குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. எனவே இந்த கண்மாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையையடுத்து, முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழ் கண்மாய் தூர்வாரப்பட்டது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் கண்மாயில் நீர் பெருகி கடல்போல் காட்சியளிக்கிறது.

Exit mobile version