லண்டன் சென்றுள்ள முதல்வருக்கு 3 ஆம் வகுப்பு சிறுமி வாழ்த்து கடிதம்

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, லண்டன் வாழ் தமிழரான சிறுமி ஒருவர் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஹாஷினி என்ற சிறுமி லண்டனில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மாங்கனி நகரத்து மக்கள் முதல்வர், விமானம் ஏறி வந்த விவசாயிகளின் முதல்வர், லண்டன் இலக்கை வென்று செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இங்கிலாந்து போல்டன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் கொண்டல ரெட்டி கண்டாடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதார துறையுடன் இணைந்து, போல்டன் பல்கலைக்கழமானது, கதிர்வீச்சு, அவசர சிகிச்சை மற்றும் மனநலம் போன்ற துறைகளில் உயர் சிகிச்சை வழங்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும் அவர் விருப்பம் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version