முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் எந்த மர்மமும் இல்லை: துணை முதல்வர்

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்த மர்மமும் இல்லை எனத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டுப் பயணம் முடிந்து முதலமைச்சர் தமிழகம் வரும்போது அனைத்திற்கும் பதில் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்மறை கேள்வி கேட்பார், எதிர்மறை பதில் சொல்வார் என்று துணை முதல்வர் விமர்சனம் செய்தார். யாராலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக உள்ளதாக குறிப்பிட்ட அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version