தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – ஜெகன்மோகன்

தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆந்திர மாநிலம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட இருக்கும் சமர சங்காராவம் என்ற பெயரில் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சியை அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்தனியாக போட்டியிடுமா? என்பது பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும், தேர்தலை தங்கள் கட்சி தனியாக சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version