தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் நிலவுவதால் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக் கடலில் உருவான மஹா புயல் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. மஹா புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அந்தமான் அருகே வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மத்திய வங்கக் கடல் பகுதியில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுப்படக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version