கடைக்கு சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்

சென்னை தாம்பரம் அருகே, கடைக்கு பால் வாங்கச் சென்ற பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில், இளம் பெண் ஒருவர் பால் வாங்குவதற்காக அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்திருந்த பன்னீர்செல்வம் என்ற நபர், அந்த இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண், அந்த நபரிடம் கேட்டபோது, ஆபாசமாக பேசிய பன்னீர்செல்வம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வத்தை கைது செய்த காவல்துறையினர், ஆபாசமாக பேசியது மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version