தொடர் மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை குடிநீர் ஆதார ஏரிகள் அனைத்தும் வேகமாக உயர்ந்து வருகின்றன.

வங்கக்கடலில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 20-ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

சோழவரம் ஏரியின் நீர் அளவு 69 கனஅடியிலிருந்து 116 கனஅடியாக உயர்ந்துள்ளது. புழல் ஏரியின் நீர் அளவு ஆயிரத்து 5 கனஅடியிலிருந்து ஆயிரத்து 58 கனஅடியாக உள்ளது. செம்பரபாக்கம் ஏரியின் நீர் அளவு 166 கனஅடியிலிருந்து 194 கனஅடியாக உள்ளது. பூண்டி ஏரியின் நீர் அளவு 460 கனஅடியிலிருந்து 948 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Exit mobile version