வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி துவக்கம்

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குபதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் எடுக்கப்பட்டு, சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆரியா மரியம் சின்னம் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள 260 வாக்குச்சாவடிகளில் 520 வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சின்னங்கள் பொருத்தும் பணி நாளை நிறைவடையும்.

Exit mobile version