நாமக்கலில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாமக்கலில், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்பணியில், மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 626 வாக்குசாவடி மையங்களுக்கும் ஆயிரத்து 980 வாக்குபதிவு இயந்திரங்கள், உள்பட 2 ஆயிரத்து 47 விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சின்னம் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version