பாம்பு கடித்து கூலி தொழிலாளி உயிரிழப்பு !

காட்டுமன்னார் கோவில் அருகே பாம்பு கடித்து கூலித் தொழிலாளி, பரிதாபமாக உயிரிழந்தார்.

காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள தொரப்பு கிராமத்தை சேர்ந்தவர் கலியன். விவசாய கூலியான இவர், நாற்றங்கால் பணியில் ஈடுபட்டிருந்த போது மறைந்திருந்த கட்டு விரியன் பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கலியனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version