தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29ம் தேதி வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 29ஆம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வு முடிவை மாணவர்கள் பரபரப்பாக எதிர்நோக்கி உள்ளனர்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 14ஆம் தேதி துவங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்களில் 9.97 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

மார்ச் 29ஆம் தேதிவரை நடைபெற்ற இந்த தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2வது வாரத்தில் துவங்கியது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்து வரும் 29ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன், தங்களது மேல்நிலை படிப்புகள் குறித்து முடிவெடுக்க முடியும் என்பதால் இந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Exit mobile version