வெளிநாட்டில் வாழும் ஊர் மக்களால் குளம் தூர்வார திரட்டப்பட்ட நிதி

புதுக்கோட்டை அருகே ஊர் பொது மக்கள் ஒன்றிணைந்து குடிநீர் குளத்தை தூர்வாரும் ஆக்கப்பூர்மான பணியை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, ஊர் பொது மக்கள் ஒன்றிணைந்து குடிநீர் குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணிக்கான தொகையை உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் அவ்வூர் பொதுமக்கள் வழங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குளம் தூர் வாரப்படுவதால் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வார தேவையில்லை என்றும், விரைவில் பருவ மழை பொழிய இருப்பதால் குளம் நீரால் நிரம்பி ஊருக்கு பலனளிக்கும் என்றும் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version