சி.ஏ.ஏ. போராட்டத்தில் காயமடைந்த காவலர்களை நேரில் சந்தித்த காவல் ஆணையர்

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவலர்களை, மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பழைய வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர்  போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பெண் காவலர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

காயம் ஏற்பட்ட காவலர்கள் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சிகிச்சைபெற்று வரும் காவலர்களை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போராட்டத்தை தூண்டும் வகையில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

Exit mobile version