சென்னையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தினை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
தனியார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிசிடிவி இயக்க துவக்க விழாவில், வேப்பேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 1768 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தினை காவல் ஆணையர் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் குற்றவாளிகள் தன்மை மாறியுள்ளது. எனவே, அவர்களை அடையாளம் காண சிசிடிவி முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.
அரசால் மட்டும் இதனை சாத்தியப்படுத்த முடியாது எனவும் பொதுமக்கள் ஆதரவோடு மூன்றாம் கண் வெற்றிகரமாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.