உறங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளியை கொன்ற மர்ம கும்பல்

சென்னையில் கூலித்தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சௌந்தர் என்பவர், அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளனர். மேலும், அவரது உடலை அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று சௌந்தரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன், கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விராசணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version