இளைஞர் படுகொலை சம்பவம் – 4 பேர் கைது

சென்னையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாந்தோம் தேவாலயத்திற்கு எதிரே உள்ள சமுதாய கூடத்தில் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி உருட்டுக் கட்டையால் தாக்கி கொன்றது.

தகவலறிந்து வந்த போலீசார் விஜயின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version