ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சிறுமி: வெளியான சிசிடிவி காட்சி

சென்னை எழும்பூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த சிறுமியை ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் உரிய நேரத்தில் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளன.

பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் என்பவரின் மகள் அனாமல் சர்மா என்ற சிறுமி, ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்தார். அப்போது அருகில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஜோஸ், தக்க சமயத்தில் ஓடிச்சென்று அவரை காப்பாற்றினார். உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்கு அஸ்வினி குமார் குடும்பத்தினர் தாமதமாக வந்ததால் ஓடும் ரயிலில் ஏற முற்பட்டனர். உரிய நேரத்தில் காப்பாற்றப்பட்ட அனாமல் சர்மாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியின் உயிரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர் ஜோஸை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Exit mobile version