சிங்கம் மற்றும் புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாய் பிறந்த சிங்கம் மற்றும் புலி குட்டிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்து ஒரு வயதான 4 புலி குட்டிகளுக்கும், 3 சிங்க குட்டிகளுக்கும், பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிங்க குட்டிகளுக்கும், புலி குட்டிகளுக்கும் பெயர் சூட்டினர். பீகார், தெலங்கானா, மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காண்டா மிருகங்கள் வசிப்பதற்காக வளமைப்படுத்தப்பட்ட இருப்பிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

Exit mobile version