இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் கடைசி டி20 போட்டி

இந்தியா மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3 க்கு 1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

இதனையடுத்து, இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 71 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்திய அணி களமிறங்க உள்ளது. டி20 போட்டிகளில் 4 சதம் அடித்து சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா, இன்னும் 69 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைப்பாரா என்றும், எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Exit mobile version