மேற்கிந்திய தீவு வீரர்கள் சென்னை வருகை

இந்திய அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் 3 க்கு 1 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதனிடையே மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் இந்திய அணி 2  க்கு பூஜ்ஜியம் என்று பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்தநிலையில் கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்காக மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தனர். அடையாறில் உள்ள தனியார் ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அந்த அணி தொடரை இழந்துள்ளநிலையில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என்பதால், ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

Exit mobile version