சர்ச்சைத் திரைப்படமான ”தி கேரளா ஸ்டோரி” நாளை நாடு முழுவதும் வெளியீடு!

சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை நாடு முழுவதும் வெளியாக உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் உஷார்படுத்த பட்டுள்ளனர்.

குறிப்பாக தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு ஏதேனும் மிரட்டல் வந்துள்ளதா என போலீசார் கேட்டறிந்து கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

இதுமட்டுமின்றி தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு எதிராக சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு இடங்களில் ஏதேனும் இது போன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக இஸ்லாமிய அமைப்புகளை கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்க வாய்ப்பு என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version