குடும்பத் தகராறில் மனைவியை கொன்ற கணவன்

சென்னை கிண்டி அருகே, குடும்பத் தகராறு காரணமாக, கணவனே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி மடுவின்கரை மசூதி காலனியைச் சேர்ந்தவர்கள் பிரசாத், உஷா தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. பிரசாத் வேலைக்கு செல்லாமல், ஊதாரித் தனமாக இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த பிரசாத், வாஷிங் மெஷினில் இருந்த டியூபை எடுத்து உஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த கிண்டி காவல்துறையினர், உஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, தலைமறைவாக இருந்த பிரசாத்தை, உஷாவின் உறவினர்களே பிடித்து, அடித்து உதைத்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version