வரும் பொங்கலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், வேலம்பட்டி, முள்ளுக்குறிச்சி, உரம்பு, சிங்கிலியங்கோம்பை, சேந்தமங்கலம், நாரைகிணறு உள்ளிட்ட பகுதிகளில் 300 ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் காளைகளுக்கு தற்போதே பயிற்சி அளிக்க தொடங்கிவிட்டனர். காளைகளை கோபப்படுத்துவது, விரட்டுவது, மண்ணை கொம்புகளால் முட்ட வைப்பது உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
Discussion about this post