போக்குவரத்திற்கு இடையூராக சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினரை கண்டித்து பூ வியாபாரி நிர்வாண கோலத்தில் நின்றதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பூ வியாபாரியான சிவக்குமார் என்பவர், அவர்களிடம் வந்து, ஒரு இலட்சம் சம்பளம் பத்தாதா என கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், அவர் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் வந்து பூ வியாபாரி சிவக்குமாரை காப்பாற்றிய் நிலையில், போராட்டகாரர்களை கண்டித்து நிர்வாண கோலத்தில் நின்ற சிவக்குமாரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post