News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

Web Team by Web Team
December 21, 2018
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்
Share on FacebookShare on Twitter

பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனினறி உயிரிழந்தார். தமிழுக்கு பெருமை சேர்த்த தற்கால படைப்பாளிகளில் பிரபஞ்சன் மிக முக்கியமானவர்.

1945-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி புதுச்சேரியில் பிறந்த அவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். அங்கு பள்ளிப்படிப்பையும், தஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டமும் பெற்றார். ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கிய அவர் குமுதம், ஆனந்த விகடன் போன்ற வாரஇதழ்களிலும் பணிபுரிந்தார்.

என்ன உலகமடா என்ற அவரது முதல் சிறுகதை 1961-ம் ஆண்டு பரணி என்ற சிற்றிதழில் வெளிவந்தது. வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள் போன்ற பெருநாவல்களையும் நேற்று மனிதர்கள், விட்டு விடுதலையாகி, இருட்டு வாசல் உள்ளிட்ட சிறுகதை தொகுதிகளையும், முட்டை – அகல்யா போன்ற நாடகங்களையும் மயிலிறகு குட்டி போட்டது, அப்பாவின் வேஷ்டி போன்ற கட்டுரை தொகுதிகளையும் எழுதி உள்ளார்.

இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்வீடிஷ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. 1995ஆம் ஆண்டில் ‘வானம் வசப்படும்’ புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

தமிழக அரசு மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதுகளையும் பிரபஞ்சன் பெற்றவர். கடந்த ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறிய நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி மீண்டும் உடல்நலம் குன்றினார். ஒருமாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Tags: newsjnewsjchannelnewsjtamilஎழுத்தாளர் பிரபஞ்சன்பிரபல எழுத்தாளர்
Previous Post

சென்னையில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி பொருத்தப்படும்: மாநகர காவல்துறை ஆணையர்

Next Post

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு

Related Posts

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!
அஇஅதிமுக

பிரச்சாரக் களத்திற்கே வராத காங்கிரஸ்.. சுறுசுறுப்பாக இயங்கும் அதிமுக – கிஷோர் கே சாமி!

February 10, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
Next Post
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை  – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !

March 20, 2023
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தொல்வி..காரணம் என்ன?

March 20, 2023
மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

மக்களை ஏமாற்றும் பட்ஜெட்… மின்மினிப்பூச்சியாக பார்க்கப்படுகிறது…தமிழ்நாடு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்..!

March 20, 2023
மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் – சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

March 20, 2023
உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று…!

உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று…!

March 20, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version